ஆய்வு விளக்கம்
தமிழ்ப் புலவர் வரிசையில் இந்நூற்றாண்டு கண்ட பெருமகனாராக விளங்குபவர் அ.க. நவநீதகிருட்டிணன் ஆவர். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த தமிழாசிரியர் அறிஞர். திருக்குறள் மணி அ.க. நவநீதகிருட்டிணனின் முழுமையான தமிழ்ப் பங்களிப்பை ஆய்வதாக இவ்வாய்வு அமைகிறது.
இவ்வாய்வில் விளக்கவியல் ஆய்வு அணுகுமுறையும். பகுப்பியல் ஆய்வு அணுகுமுறையும். திறனாய்வு முறையும் பயன் கொள்ளப்பட்டன.
இவ்வாய்வேடு முன்னுரை. முடிவுரை நீங்கலாக ஐந்து இயல்களைக் கொண்டது.
1. அ.க. நவநீதகிருட்டிணன் வாழ்வும் பணியும்
2. அ.க. நவநீதகிருட்டிணன் எழுத்துப்பணி
3. அ.க. நவநீதகிருட்டிணன் பேச்சுப்பணி
4. அ.க. நவநீதகிருட்டிணன் கலைப்பணி
5. அ.க. நவநீதகிருட்டிணன் அறிவுப்புலம்
1. தனிமனித வரலாறும். சமுதாய வரலாறும் பின்னிப் பிணைந்தவை. அ.க.ந. வின் வாழ்வுக்கால சமூக நெறி இவர்தம் எழுத்திலும் பேச்சிலும் வெளிப்பட அமைந்துள்ளது.
2. சைவ சமயச் சார்பும் தமிழ். தமிழர் முன்னேற்றப்பேச்சு பொருள் இயக்கச் சார்பும் இவர் தம் இருகண்களாக விளங்கக் காண்கிறோம்.
3. அ.க.ந. தம் எழுத்து. பேச்சு ஆகியன சிறக்க வேண்டி பொதுமக்கள் அனுபவச் சாரமாகிய பழமொழிகளையும். கல்வி வல்லார் கருத்துரையையும் பயன் கொள்ளும் வழக்கத்தினர்.
4. பழமை போற்றுவதோடு இவர்க்குப் புதுமைக்காணும் ஆவலும் உண்டு. பொருத்தமுடைய புதுப்பொருளைச் சுவைப்படப் பொருத்திக்காட்டும் இவரிடம் காணமுடிகிறது.