Print
பல்கலைக்கழக விவரம்
பல்கலைக்கழக பெயர் பாரதியார் பல்கலைக்கழகம்
நகரம் கோயம்புத்தூர்
மாவட்டம் தமிழ்நாடு
அஞ்சல் குறியீட்டு எண்
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் சி. அரங்கராசு
நகரம் ஈரோடு
ஆய்வு விவரம்
தலைப்பு வைரமுத்து கவிதைகளில் சமுதாயச் சிந்னைகள்
வகைமை இக்காலஇலக்கியங்கள்
துணை வகைமை புதுக்கவிதை
பதிவு நாள் 2008
நெறியாளர் க. ஆ. முருகேசன்
துணை நெறியாளர் க. ஆ. முருகேசன்
ஆய்வு விளக்கம்
முன்னுரை
வைரமுத்து கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள் என்னும் தலைப்பில் இவ்வாய்வேடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்வு அணுகுமுறை
விளக்க, சமுதாயவியல் அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.
ஆய்வுப் பகுப்பு
இவ்வாய்வேடு, 1. வைரமுத்துவின் வாழ்வும் வளர்ச்சியும் 2. புதுக்கவிதை வரலாற்றில் வைரமுத்து பெறும் இடம் 3. வைரமுத்து கவிதைகளில் மனிதநேய விழிப்புணர்வு 4. வைரமுத்து கவிதைகளில் பகுத்தறிவுக் கொள்கை 5. வைரமுத்து கவிதைகளில் பெண்ணியக் கருதாக்கம் 6. வைரமுத்து கவிதைகளில் சமுதாய சிக்கல்கள் ஆகிய இயல்களைக் கொண்டுள்ளது.
முடிவுரை
வைரமுத்து கவிதைகளில் புதிய சொற்களும், புதிய சொல்லாடல்களும் உருவாகின. புதிய சொற்கள் மொழியை அழகுபடுத்தின, இலக்கியமம் தனக்கெனப் போட்டிருந்தக் கட்டுப்பாடுகளைக் களைந்து சுதந்திரமாய் இவர் கவிதைகளில் நடக்கத் தொடங்கியது. இவரின் கவிதைகள் மொழிக்குப் புதிய தளங்களை உருவாக்கித் தந்தன. மனிதப் பண்பை மனிதனுக்குச் சொல்லி மனிதனை மனிதனாக்கும் இலக்கியமே இலக்கியம், என்ற கருத்தினை வலியுறுத்தி, அதற்கேற்ப தம் கவிதைகளைப் புனைந்துள்ளார் வைரமுத்து. மானுட விடுதலை என்பதை மனதகுலம் எய்த வேண்டிய இலட்சியம் என்று எடுத்துரைத்து இளைஞர்களை அந்த இலட்சியப் பாதையை நோக்கிப் பயணிக்க ஏற்றவாறு தமது கவிதைகளையே பாதைகளாக மாற்றியுள்ளார் வைரமுத்து. குழந்தைகளைத் தொழிலாளர்களாகப் பாவிக்கும் போக்கினைக் கண்டித்து வைரமுத்து பல கவிதைகள் இயற்றியுள்ளார். அக்கவிதைகளில் மானுடநேயம் மிளிர்ந்து ஏழைகள் வறுமையினால் அடையும் துயர்களைக் கண்டு வருந்தும் வைரமுத்து, அவர்களின் துயர் துடைக்கும் காரணிகளைத் தமது கவிதைகளின் வழியாக வெளிப்படுத்தியுள்ளார். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, மனிதகுலத்தை அழிவுப்பாதையை நோக்கி நகர்த்துவதற்குக் காரணம் மனிதர்களிடையே உள்ள மனிதநேயமின்மையே என்பதனைக் கவிதைகளில் காட்டியுள்ளார். வைரமுத்துவின் இந்த நேய மனப்பாண்மை உயர்திணை உயிர்களைத் தாண்டி அஃறிணைப் பொருட்களையும் தழுவும் வகையில் உள்ளது. மரம், மழை போன்றவற்றையும் நேயக்கரம் கொண்டு வைரமுத்துவின் கவிதைகள் அரவனைத்துள்ளன.