ஆய்வு விளக்கம்
மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத இயற்கையோடு தமிழர்கள் கொண்டிருந்த உறவும், உரிமையும் இவ்வரையறைகளின் வாயிலாக வெளிப்படுகின்றன. இன்றைய காலகட்டத்தில் மனிதன் பேணிக்காக்க வேண்டியவற்றுள் இயற்னை முதலிடம் பெற்று விளங்குகிறது.
சங்ககால மக்கள் இயற்கைச் சூழலோடு இணைந்து வாழ்ந்த வாழ்க்கையும் அது பற்றிய புரிதல் திறன்களும் இவ்வாய்விற்கான கருதுகோளாகும்.
இயல் 1. பண்டைத் தமிழரின் இயற்கை வரையறை
இயல் 2. சங்க இலக்கியத்தில் இயற்கை
இயல் 3. சங்க இலக்கியம் காட்டும் சூழல் அறிவு
இயல் 4. சங்க இலக்கியம் காட்டும் சூழல் மாசுபாடு
இயல் 5. சூழலியலும் இன்றைய போக்கும்.
இல்லை
சங்க இலக்கியத்தில் உவமை நலன் உயர்ந்து நிற்பதற்குப் படைப்பாளிகளில் இயற்கை சார்ந்த அறிவே காரணமாகும். அகம், புறம் என்ற இரண்டு நிலைகளிலும் உவமையில் இயற்கை இடம்பெற்று, படைப்பாளிகளின் கருத்தைச் செறிவாக உலகிற்கு எடுத்து இயம்புகிறது. உள்ளுரை, இறைச்சி ஆகியவற்றில் அமைந்த இயற்கைப் புனைவுகள் தமிழ்ச் சமுகத்தின் அக வாழ்க்கையின் நிறைகுறைகளை உலகிற்குப் படம் பிடித்துக் காட்டும் முகத்தான் அமைந்துள்ள பங்கு புலப்படுகிறது. மேலும், உள்ளுரை, இறைச்சிப் பாடல்கள் தோழி, தலைவி, தலைவன் ஆகியோருடைய கூற்றுக்களிலேயே மிகுதியாக இடம் பெற்றுள்ளதை விளங்க முடிகிறது.
தமிழர்கள் வரையறுத்துக் கொண்ட நிலப்பாகுபாடும் அந்நிலத்திற்குரிய தொழில் முறையும் தமிழ்ச் சமூகத்தைப் பல்லாற்றானும் வளப்படுத்தியுள்ளது.