ஆய்வு விளக்கம்
பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம் இவைகளைக் காலந்தோறும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பது இலக்கியம், குடும்ப வாழ்வில் ஏற்படும் சிறுசிறு பிரச்சினைகள் அதனால் ஏற்படும் பிரிவினைத் தொடர்ந்து கொண்டே இருந்தாலும், பொருளாதாரச் சூழவுக்கேற்ப அவைகளின் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவற்றுனொன்று தலைவன் தலைவி ஊடலாகும்.
நல்ல சமுதாயம் அமைய அடித்தளமாக அமைவது இல்லறவாழ்வாகும். இன்றைய இல்லற வாழ்வில் ஏற்படும் பிணக்குகள் பற்றித் தொல்காப்பியம் கூறும் வாழ்க்கை நெறியோடு சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள ஊடல் பொருண்மைகள் பிற்கால இலக்கியங்களில் இருக்கும் என்பதாகக் கருதுகோள் அமைந்துள்ளது.
பகுப்பாய்வு அணுகுமுறை, சமுதாயவியல் அணுகுமுறை, விளக்கவியல் அணுகுமுறை
1. ஊடல் - சொற்பொருள் விளக்கம்
2. சங்க இலக்கியத்தில் ஊடல்
3. பிற்கால இலக்கியங்களில் ஊடல்
4. சங்ககால – பிற்கால ஊடல் ஒப்பீடு
மனித உணர்வுகள் ஆண், பெண் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் உண்டாக்க கூடியவை அத்தகைய உணர்வுகளில் ஊடலும் ஒன்றாகும். உள்ளத்தளவிலே வெறுப்பைக் கொண்டிருப்பது புலவியாகும். மனத்தளவில் உண்டாகும் வெறுப்பை மெய்ப்பட்டாலும் சொல்லாலும் வெளிக்காட்டுவது ஊடலாகும். ஊடல் பெண்ணிற்குப் பிறப்பியல்பு என்பதினால் பெண்ணிற்கு மட்டும் ஊடல் உண்டாவதில்லை. தலைவனுக்கும் ஊடல் உண்டாகும் என்பது தொல்காப்பியத்தின் வழி அறியலாகிறது. சங்க காலத்தில் ஒருவனின் பல மனைவியரிடையே நிகழ்ந்த பூசலின் இலக்கிய வடிவம் ஊடல் எனப்படுகிறது. பலதார மணத்திற்கு எதிராக எழுதப்பட்ட உரிமைக்குரல் ஊடலில் தொடங்குகிறது. சங்க இலக்கியத்தில் தலைவிக்குத் தலைவளின் பரத்தைமை காரணமாக மட்டும் ஊடல் நிகழ்வில்லை. பொருள் வயிற் பிரிந்த நிலையிலும் ஊடல் உண்டாகும் என்பது ஆய்வில் பெறப்பட்டுள்ளது. திருக்குறளில் தலைவன் பரத்தையிடம் சென்றுவந்ததாகப் பாடல்கள் இல்லை. ஆடவனின் பலதார மனத்தால் நிகழ்ந்த உச்சகட்ட நிலையினை உற்றவரின் ஊடல் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன என்பது பெறப்பட்டள்ளது.