ஆய்வு விவரம் தேடல்
ஊடகங்களில் மொழிப்பயன்பாடும் சமுதாயத் தாக்கமும். - து. ஜானகி
பல்கலைக்கழக விவரம்
பல்கலைக்கழக பெயர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
நகரம் மதுரை
மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண்
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் து. ஜானகி
நகரம் மதுரை
ஆய்வு விவரம்
தலைப்பு ஊடகங்களில் மொழிப்பயன்பாடும் சமுதாயத் தாக்கமும்.
வகைமை மக்கள்தகவல் தொடர்பியல்
துணை வகைமை தகவல் தொடர்பியல்
பதிவு நாள் 2005
நெறியாளர் வீ. ரேணுகாதேவி
துணை நெறியாளர் வீ. ரேணுகாதேவி
ஆய்வு விளக்கம்
முன்னுரை:-
ஊடகங்களில் மொழிப்பயன்பாடும் சமுதாயத் தாக்கமும்’ என்னும் தலைப்பை ஆய்வுப் பொருளாகக் கொண்டுஇவ்வாய்வுஅமைகின்றது.
ஆய்வுக் கருதுகோள்
ஊடகங்களில் பயன்படுத்தப்படும் தமிழ் மொழியின் மையக் கூறுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அம்மாற்றங்கள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தடையாக அமையுமா? என ஆராய்வது கருதுகோளாக அமைகின்றது. ஒவ்வொரு மொழிக்கும் என்று தனியான பண்பாட்டுக் கூறுகளும், கட்டமைப்பும் உண்டு. அவ்வாறு இருந்தால்தான் அது தனிப்பட்ட மொழி என நிலைநாட்டிக்கொள்ள முடியும். ஆனால் தமிழ்மொழியின் தனித்தன்மையைச் சிதைக்கும் மொழியினை த்தொலைக்காட்சி பயன்படுத்தினால் சமுதாயத்தில் கேடுகளை உண்டாக்குமா,என்பது அடுத்த கருதுகோளாக அமைகின்றது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் மொழி வேறுபட்டுக் காணப்படுவதால் செய்யுள்மொழி, கவிதைமொழி, பத்திரிகை மொழி என இருப்பது போன்று தொலைக்காட்சிக்கெனத் தனிமொழி ஒன்று உருவாகுமா, என்பதை ஆராய்வது பிறிதொரு கருதுகோளாக அமைகின்றது.
ஆய்வு அணுகுமுறைகள்:-
இவ்வாய்வில் விளக்கமுறை ஆய்வு, ஒப்பீட்டுமுறை ஆய்வு, மதிப்பீட்டு முறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆய்வுப் பகுப்பு:-
இவ்வாய்வு முன்னுரை, முடிவுரை உள்ளடக்கி ஆறு இயல்களைக் கொண்டுள்ளது.அவை 1. முன்னுரை 2. நிகழ்ச்சிகளின் வகைப்பாடு 3. மொழிப்பயன்பாடு 3.1 நிகழ்ச்சிகளில் மொழிப்பயன்பாடு 3.2 விளம்பரங்களில் மொழிப்பயன்பாடு 4. பிற மொழிப் பயன்பாடு 4.1 நிகழ்ச்சிகளில் பிறமொழிப் பயன்பாடு 4.2 விளம்பரங்களில் பிறமொழிப் பயன்பாடு 5. சமுதாயத் தாக்கம் 5.நிகழ்ச்சிகளில் ஏற்படும் சமுதாயத் தாக்கம் 5.2 விளம்பரங்களில் ஏற்படும் சமுதாயத் தாக்கம் 6. முடிவுரை என்பனவாகும்
முடிவுரை:-
ஊடகங்களில் மொழிப்பயன்பாடு என்னும் ஆய்வு மிகப் பரந்துபட்ட ஒன்றாகும். இன்றைய சூழலில் மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வீட்டுத் தேவைகளில் ஒன்றாக ஊடகங்கள் அமைந்துள்ளன. இவ்ஊடகங்கள் மக்களிடையே பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன என்பது பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. இன்று தொலைக்காட்சி வீட்டிலுள்ளவர்களைத் தனித்தனித் தீவுகளாக்கி வருகின்றன. மக்களிடையே பண்பாட்டுத் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாது அவர்கள் பயன்படுத்தும் மொழியமைப்பிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஊடகமொழியின் ஒரு பிரிவாக விளம்பர மொழியும் வளர்ந்து வருகின்றது. உரைநடைத் தமிழ், நாடகத்தமிழ் போன்று ஊடகத்தமிழ் என்ற ஒரு வகை நடை உருவாகிக் கொண்டிருக்கின்றது. இது பற்றிய ஆராய்ச்சி இனிவரும் ஆய்வாளர்களுக்கு நல்ல ஒரு ஆய்வுக்களமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
பெரம்பலூர் மாவட்ட நாட்டுப் புறப்பாடல்கள் - பெ இளங்கோவன்
கல்லூரி விவரம்
கல்லூரி பெயர் தேசியக்கல்லூரி
பல்கலைக்கழக பெயர் பாரதிதாசன் பல்கலைக்கழகம்
நகரம் திருச்சி
மாவட்டம் திண்டுக்கல் சாலை
அஞ்சல் குறியீட்டு எண்
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் பெ இளங்கோவன்
நகரம் திருச்சிராப்பள்ளி
ஆய்வு விவரம்
தலைப்பு பெரம்பலூர் மாவட்ட நாட்டுப் புறப்பாடல்கள்
வகைமை நாட்டுப்புறவியல்
துணை வகைமை நாடடார்இலக்கியம்
பதிவு நாள் 2003
நெறியாளர் கு. இராச ரெத்தினம்
துணை நெறியாளர் கு. இராசரத்தினம்
ஆய்வு விளக்கம்
முன்னுரை
பெரம்பலூர் மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் " என்பதே இவ்வாய்வின் தலைப்பாக அமைகின்றது
ஆய்வு அணுகுமுறை
இவ்வாய்வில் விளக்கவியல் அணுகுமுறை பகுப்பாய்வு அணுகுமுறையும் பின்பற்றப்பட்டுள்ளது
ஆய்வுப்பகுப்பு
இவ்வாய்வு முன்னுரை முடிவுரை நீங்கலாக ஆறு இயல்களைக் கொண்டுள்ளது 1 பெரம்பலூர் மாவட்ட நாட்டுப்புற மக்கள் ஓர் அறிமுகம் 2 தாலாட்டுப் பாடல்கள் 3 கொண்டாட்டப் பாடல்கள் 4 ஒப்பாரிப் பாடல்கள் 5 தொழிற் பாடல்கள் 6 நாட்டுப்புற மக்களின் வாழ்க்கை நிகழ்வுகளும் சடங்குகளும்
முடிவுரை
இவ்வாய்வில் கண்ட முடிவுகள் இங்குத்தொகுத்து அளிக்கப்படுகின்றன இம்மாவட்டச் சிற்றூர்கள் அகன்ற வீதிகளையும் தெருக்களையும் கொண்டுள்ளன ஏழைகள் மண் குடிசைகளிலும் மண் சுவர் வீடுகளிலும் ,செல்வந்தர்கள் மாடி ஓட்டு வீடுகளிலும் வசிக்கின்றனர். பெண்கள் காலையில் எழுந்தவுடன் வீட்டு வாசலைக் கூட்டிச் சானம் தெளித்துக் கோலம் போடுகின்றனர். மழைக் காலங்களில் ஏழைகள் தலைப்பில் தென்னை முடையப்பட்ட கொடலையும் சாக்குகளைக் கொங்காணிகளாக மடித்துப் போட்டும் செல்வத்தர்கள் துணிச் குடைகளையும் பயன்படுத்துகின்றனர். நெல் உளுந்து பயறுபோன்ற தானியங்களைத் தமது வீட்டின் குதிரில் சேமித்து வைக்கின்றனர்.மாமியார் மருமகன் உறவு நிலை இனிமையில்லா திருப்பது பெண்களைப் பெண்களே மதிப்பதில்லை என்பதற்குச் சான்றாகிறது. எனவே பெரம்பலூர் மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் இம்மாவட்டத்தின் சமுதாய நிலையை நன்கு விளக்கும் வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்கிறது. இம்மாவட்டத்தில் நாட்டுப்புறப் பாடல்கள் மட்டுமின்றி மக்களின் பண்பாடு நாகரிகம் நாட்டுப்புற நம்பிக்கைகள் நாட்டுப்புற மருத்துவம் எனப் பல ஆய்வுகள் செய்வதற்குக் களமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.
இசைமேதை டாக்டர் எஸ். இராமநாதன் - என். பாரதி
நிறுவன விவரம்
நிறுவனத்தின் பெயர் ஸ்ரீ ஸத்குரு ஸங்கீத வித்யாலயம்
நகரம் மதுரை
மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண் 625 002
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் என். பாரதி
நகரம் மதுரை
ஆய்வு விவரம்
தலைப்பு இசைமேதை டாக்டர் எஸ். இராமநாதன்
பதிவு நாள் 2008
நெறியாளர் லதா வர்மா
துணை நெறியாளர் லதா வர்மா
ஆய்வு விளக்கம்
முன்னுரை:-
‘இசைமேதை டாக்டர் எஸ். இராமநாதன்’ என்பது ஆய்வுத் தலைப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
ஆய்வு அணுகுமுறை:-
இவ்வாய்வில் விளக்கமுறை ஆய்வு அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது
ஆய்வுப் பகுப்பு:-
இவ்வாய்வேடு முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஆறு இயல்களைக் கொண்டது.அவை 1. எஸ். ஆரின் வாழ்க்கை வரலாறு 2. ஆசிரியப் பெருமக்கள் 3. நல்லாசிரியர் 4. ஆழ்ந்த ஆராய்ச்சியாளர் 5. தேர்ந்த இசைக்கலைஞர் 6. சிறந்த வாக்கேயக்காரர். என்பனவாகும்
முடிவுரை:-
சிறந்த பண்பாளராக, மனிதநேயம் மிக்கவராக, அறிவாற்றல் மிக்கவராக, அன்புள்ளம் கொண்டவராக, நல்லாசிரியராக, தேர்ந்த இசைக்கலைஞராக, ஆழ்ந்த ஆராய்ச்சியாளராக வாக்கேயக்காரராகத் திகழ்ந்த எஸ். ஆரை ‘இசைமேதை’ என்று உலகம் போற்றுவது, இசையைப் போற்றுவது போல் ஆகும். இசைக்காக இசையென்றே வாழ்ந்து காட்டிய சிறந்த மனிதரின் நினைவுகள், அவருடன் பழகியவர்களுக்கும் அவரை அறிந்தவர்களுக்கும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து என்றும் நீங்காதவை. ஆலமரம் போல் அவருடைய புகழ் எங்கும் பரந்து உறுதியுடன் நிலைத்து நிற்கும்.
1