ஆய்வு விவரம் தேடல்
ஊடகங்களில் மொழிப்பயன்பாடும் சமுதாயத் தாக்கமும். - து. ஜானகி
பல்கலைக்கழக விவரம்
பல்கலைக்கழக பெயர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
நகரம் மதுரை
மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண்
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் து. ஜானகி
நகரம் மதுரை
ஆய்வு விவரம்
தலைப்பு ஊடகங்களில் மொழிப்பயன்பாடும் சமுதாயத் தாக்கமும்.
வகைமை மக்கள்தகவல் தொடர்பியல்
துணை வகைமை தகவல் தொடர்பியல்
பதிவு நாள் 2005
நெறியாளர் வீ. ரேணுகாதேவி
துணை நெறியாளர் வீ. ரேணுகாதேவி
ஆய்வு விளக்கம்
முன்னுரை:-
ஊடகங்களில் மொழிப்பயன்பாடும் சமுதாயத் தாக்கமும்’ என்னும் தலைப்பை ஆய்வுப் பொருளாகக் கொண்டுஇவ்வாய்வுஅமைகின்றது.
ஆய்வுக் கருதுகோள்
ஊடகங்களில் பயன்படுத்தப்படும் தமிழ் மொழியின் மையக் கூறுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அம்மாற்றங்கள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தடையாக அமையுமா? என ஆராய்வது கருதுகோளாக அமைகின்றது. ஒவ்வொரு மொழிக்கும் என்று தனியான பண்பாட்டுக் கூறுகளும், கட்டமைப்பும் உண்டு. அவ்வாறு இருந்தால்தான் அது தனிப்பட்ட மொழி என நிலைநாட்டிக்கொள்ள முடியும். ஆனால் தமிழ்மொழியின் தனித்தன்மையைச் சிதைக்கும் மொழியினை த்தொலைக்காட்சி பயன்படுத்தினால் சமுதாயத்தில் கேடுகளை உண்டாக்குமா,என்பது அடுத்த கருதுகோளாக அமைகின்றது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் மொழி வேறுபட்டுக் காணப்படுவதால் செய்யுள்மொழி, கவிதைமொழி, பத்திரிகை மொழி என இருப்பது போன்று தொலைக்காட்சிக்கெனத் தனிமொழி ஒன்று உருவாகுமா, என்பதை ஆராய்வது பிறிதொரு கருதுகோளாக அமைகின்றது.
ஆய்வு அணுகுமுறைகள்:-
இவ்வாய்வில் விளக்கமுறை ஆய்வு, ஒப்பீட்டுமுறை ஆய்வு, மதிப்பீட்டு முறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆய்வுப் பகுப்பு:-
இவ்வாய்வு முன்னுரை, முடிவுரை உள்ளடக்கி ஆறு இயல்களைக் கொண்டுள்ளது.அவை 1. முன்னுரை 2. நிகழ்ச்சிகளின் வகைப்பாடு 3. மொழிப்பயன்பாடு 3.1 நிகழ்ச்சிகளில் மொழிப்பயன்பாடு 3.2 விளம்பரங்களில் மொழிப்பயன்பாடு 4. பிற மொழிப் பயன்பாடு 4.1 நிகழ்ச்சிகளில் பிறமொழிப் பயன்பாடு 4.2 விளம்பரங்களில் பிறமொழிப் பயன்பாடு 5. சமுதாயத் தாக்கம் 5.நிகழ்ச்சிகளில் ஏற்படும் சமுதாயத் தாக்கம் 5.2 விளம்பரங்களில் ஏற்படும் சமுதாயத் தாக்கம் 6. முடிவுரை என்பனவாகும்
முடிவுரை:-
ஊடகங்களில் மொழிப்பயன்பாடு என்னும் ஆய்வு மிகப் பரந்துபட்ட ஒன்றாகும். இன்றைய சூழலில் மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வீட்டுத் தேவைகளில் ஒன்றாக ஊடகங்கள் அமைந்துள்ளன. இவ்ஊடகங்கள் மக்களிடையே பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன என்பது பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. இன்று தொலைக்காட்சி வீட்டிலுள்ளவர்களைத் தனித்தனித் தீவுகளாக்கி வருகின்றன. மக்களிடையே பண்பாட்டுத் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாது அவர்கள் பயன்படுத்தும் மொழியமைப்பிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஊடகமொழியின் ஒரு பிரிவாக விளம்பர மொழியும் வளர்ந்து வருகின்றது. உரைநடைத் தமிழ், நாடகத்தமிழ் போன்று ஊடகத்தமிழ் என்ற ஒரு வகை நடை உருவாகிக் கொண்டிருக்கின்றது. இது பற்றிய ஆராய்ச்சி இனிவரும் ஆய்வாளர்களுக்கு நல்ல ஒரு ஆய்வுக்களமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
மறை அருவி காலாண்டிதழில் விடுதலை இறையியல் (1987 – 1997) - இ. அமல்ராஜ்
கல்லூரி விவரம்
கல்லூரி பெயர் புனித வளனார்கல்லூரி
பல்கலைக்கழக பெயர் பாரதிதாசன் பல்கலைக்கழகம்
நகரம் திருச்சி
மாவட்டம் தமிழ்நாடு
அஞ்சல் குறியீட்டு எண்
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் இ. அமல்ராஜ்
நகரம் திருச்சிராப்பள்ளி
ஆய்வு விவரம்
தலைப்பு மறை அருவி காலாண்டிதழில் விடுதலை இறையியல் (1987 – 1997)
வகைமை இதழியல்
துணை வகைமை கிறிஸ்தவம்
பதிவு நாள் 2000
நெறியாளர் கா. கலிய பெருமாள்
துணை நெறியாளர் கா. கலிய பெருமாள்
ஆய்வு விளக்கம்
முன்னுரை:-
மறை அருவியல் தொடக்க காலத்தில் வெறும் சமயப்பரப்புதல் பணிக்கான கட்டுரைகள் மட்டுமே வெளிவந்தன. ஆனால் கி.பி. 1987 ஆம் ஆண்டுற்குப் பிறகு விடுதலையை பரப்பியது தென் அமெரிக்காவில் தோன்றி உருவெடுத்த விடுதலை இறையியல், நம்நாட்டுச் சூழலமைவிற்கு ஏற்ப தோன்றி வளர்ந்து விடுதலை இறையியல் என்பது மக்களினம் வாழும்போது ஏற்படுகின்ற சிக்கல்களில் இருந்து பிரச்சினைகளில் இருந்து நெருக்கடி நிலைகளில் இருந்து விடுதலையடைய உருவெடுக்கின்றது.
ஆய்வு அணுகுமுறை:-
இவ்வாய்வில் சமூகப் பகுப்பாய்வு அணுகுமுறை, விளக்கவியல் அணுகுமுறை, மானுடவியல் அணுகுமுறை, வரலாற்றுயியல் அணுகுமுறையும் எடுத்தாளப்பட்டுள்ளது.
கருதுகோள்:-
மறை அருவியில் வெளிவந்த கட்டுரைகள் சமூக விடுதலையைக் கொணர்ந்திருக்கின்றன. அவ்விடுதலை ஒரு படித்தான சமூகத்தை மாற்றி அமைக்கின்றதா? அல்லது சமூக விடுதலைக்குக் காரணியாகவாவது அமைந்துள்ளதா? என்பதே முதன்மைக் கருதுகோள். மறை அருவியின் கட்டுரைகளால் கிறித்துவத் திருச்சபையும் திருச்சபையர்களும் மாற்றம் பெற்றுச் சமூக வளர்ச்சியான மாற்றத்தில் பங்கு கொடுத்துள்ளனரா? என்பது இரண்டாவது கருதுகோள். தென் அமெரிக்காவில் தோன்றிய விடுதலை இறையியல் நம் நாட்டிற்குமாக உட்கொண்டு செயல்பட்டதில் மனித சமூகம் மேம்பட்டுள்ளதா? என்பது மூன்றாவது கருதுகோள். ‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும்’ இடத்திலே என்பர். ஆனால் இன்றைக்குப் பல குடும்பங்களில் பெற்றோர்கள் உழைக்காமல். அல்லது அவ்வுழைப்பிற்கு ஏற்ற ஊதியமின்மையால் குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்குகின்றனர் என்பதே நான்காவது கருதுகோள்.
ஆய்வுப் பகுப்பு:-
இவ்வாய்வேடு முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஏழு இயல்களைக் கொண்டுள்ளது. 1. மறைஅருவியின் தோற்றம் வளர்ச்சி 2. இறையியல் விடுதலை இறையியல் ஒரு விளக்கம் 3. இயேசு பெருமானின் விடுதலை உள்ளம் 4. குழந்தைத் தொழிலாளர் விடுதலை இறையியல் 5. சாதிய தலித் விடுதலை இறையியல் 6. . 7. சமூக –கல்வி – பொருளாதாரத் தடைகளிலிருந்து விடுதலை
முடிவுரை:-
கடந்த 2000 ஆண்டுகளில் சமயத்தின் பெயரால் கிறித்துவர்கள் செய்துவந்த பாவங்கள். வண்செயல்கள், பிறசமயத்தைப் பின்பற்றுவோர்பால் காட்டிய விரோதத்திற்காக குற்றங்களுக்காக, திருச்சபையின் தவறுகளுக்காக 12-3-2000 அன்று மன்னிப்புக் கேட்டார். திருத்தந்தை இரண்டாம் ஜான்பால், இதுவரையில் வேறு எந்த திருத்தந்தையர்களும் பொது மன்னிப்பு கேட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திருத்தந்தையின் இந்த முன்மாதிரியான செயலை ஒவ்வொரு கிறித்துவர்களும், அருட்பணியாளர்களும் பின்பற்றும் போது தான் மெய்யான விடுதலை இறையியல்களின் கருத்துருவாக்கம் மெய்பிக்கப்படும் என்பதே உண்மை. அப்போது தான் கிறித்துவ திருச்சபை அகில உலக சமூகத்தின் மீது அக்கறைக் கொண்டுள்ளது என உணரமுடியும்.
இசைமேதை டாக்டர் எஸ். இராமநாதன் - என். பாரதி
நிறுவன விவரம்
நிறுவனத்தின் பெயர் ஸ்ரீ ஸத்குரு ஸங்கீத வித்யாலயம்
நகரம் மதுரை
மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண் 625 002
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் என். பாரதி
நகரம் மதுரை
ஆய்வு விவரம்
தலைப்பு இசைமேதை டாக்டர் எஸ். இராமநாதன்
பதிவு நாள் 2008
நெறியாளர் லதா வர்மா
துணை நெறியாளர் லதா வர்மா
ஆய்வு விளக்கம்
முன்னுரை:-
‘இசைமேதை டாக்டர் எஸ். இராமநாதன்’ என்பது ஆய்வுத் தலைப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
ஆய்வு அணுகுமுறை:-
இவ்வாய்வில் விளக்கமுறை ஆய்வு அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது
ஆய்வுப் பகுப்பு:-
இவ்வாய்வேடு முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஆறு இயல்களைக் கொண்டது.அவை 1. எஸ். ஆரின் வாழ்க்கை வரலாறு 2. ஆசிரியப் பெருமக்கள் 3. நல்லாசிரியர் 4. ஆழ்ந்த ஆராய்ச்சியாளர் 5. தேர்ந்த இசைக்கலைஞர் 6. சிறந்த வாக்கேயக்காரர். என்பனவாகும்
முடிவுரை:-
சிறந்த பண்பாளராக, மனிதநேயம் மிக்கவராக, அறிவாற்றல் மிக்கவராக, அன்புள்ளம் கொண்டவராக, நல்லாசிரியராக, தேர்ந்த இசைக்கலைஞராக, ஆழ்ந்த ஆராய்ச்சியாளராக வாக்கேயக்காரராகத் திகழ்ந்த எஸ். ஆரை ‘இசைமேதை’ என்று உலகம் போற்றுவது, இசையைப் போற்றுவது போல் ஆகும். இசைக்காக இசையென்றே வாழ்ந்து காட்டிய சிறந்த மனிதரின் நினைவுகள், அவருடன் பழகியவர்களுக்கும் அவரை அறிந்தவர்களுக்கும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து என்றும் நீங்காதவை. ஆலமரம் போல் அவருடைய புகழ் எங்கும் பரந்து உறுதியுடன் நிலைத்து நிற்கும்.
1