ஆய்வு விவரம் தேடல்
தமிழில் கடித இலக்கியம் - இரா. தாமோதரன்
பல்கலைக்கழக விவரம்
பல்கலைக்கழக பெயர் சென்னைப் பல்கலைக்கழகம்
நகரம் சென்னை
மாவட்டம் தமிழ் நாடு
அஞ்சல் குறியீட்டு எண் 6000005
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் இரா. தாமோதரன்
நகரம் சென்னை
ஆய்வு விவரம்
தலைப்பு தமிழில் கடித இலக்கியம்
வகைமை இலக்கியம்
துணை வகைமை கடிதம்
பதிவு நாள் 2003
நெறியாளர் இ. சுந்தரமூர்த்தி
துணை நெறியாளர் இ. சுந்தரமூர்த்தி
ஆய்வு விளக்கம்
முன்னுரை
உலக இலக்கியங்கள் பலவற்றிலும் அதன் போக்கில் புதுவகையான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதன் பாதிப்பில் தமிழ் இலக்கியத்தின் வடிவங்களான கட்டுரை, கவிதை, நாடகம், புதினம் ஆகிய வடிவங்களில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், மேற்கத்திய இலக்கியத்தின் வருகையினால், உரைநடையானது. தமிழ் இலக்கிய உலகத்திற்கு வந்து சேர்ந்தது. அதிலும் சிறுகதை, நாவல், நாடகங்கள், திறனாய்வு, கட்டுரைகள் (கடித வடிவம்) போன்றவை உரைநடையில் ஆக்கப்பட்டு, தற்காலத்திய இலக்கியம் எனக் குறிக்கப்படும்படியான வடிவ, உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கின்றன. மட்டுமல்லாது, அவை சமூகப் பார்வையையும், நடப்பியல் பண்பையையும் ஆதாரமாகக் கொண்டிருந்தன. இன்று தமிழில் கடித இலக்கியமானது. கட்டுரை இலக்கியம் என்னும் வகையுள் அடங்குவதாகவே உள்ளது உள்ளடக்கத்தில் மட்டுமே. பெரும்பான்மையாக வேறுபட்ட புதிய போக்கைக் கொண்டு விளங்குகிறது. மேற்கத்திய இலக்கியத்தில் தோன்றிய கடித வடிவப் படைப்புகள் போன்றே. தமிழில் கடித இலக்கியம் தோன்ற ஆரம்பித்துள்ளது தற்போதும் தொடர்ந்து எழுதப்பட்டு வரப்படுகின்றன. இதனால், அறவியல், நீதிமொழி, வரலாறு, சமூகத் திறனாய்வு, தத்துவம் என்று பலவற்றை உள்ளடக்கமாக் கொண்டு கடித வடிவப் படைப்புகள் தோன்றி வளர்ந்து வருகின்றன. இவ்வகையான, புதிய படைப்பாகக் கருதப்படும் கடித இலக்கியத்தை ஆய்வுக்குட்படுத்த வேண்டிய சூழ்நிலை நேர்ந்துள்ளது.
கருதுகோள்
1. தமிழ்க் கடித இலக்கியம் மேலைநாட்டு கடித இலக்கியத்தின் தாக்கம் பெற்றிருக்கின்றன. 2. அவை வடிவ நிலையில் குறைவாகவும், உள்ளடக்க நிலையில் மிகுதியாகவும் இடம் பெற்றுள்ளன. இக் கருதுகோள்களின் வன்மை, மென்மைகளைக் கண்டறிந்து இவற்றின் வழிப்பெறப்படும் தீர்வுகள் கடித இலக்கியத்தை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் துணை செய்யவல்லன.
ஆய்வு அணுகுமுறை
தமிழ்க் கடித இலக்கியத்தில் காணப்படும் போக்குகளை விளக்குவதற்கு அரசியல், சமுதாயம், சமயம், கல்வி என்ற பல அடிப்படைகளில் வரலாற்றியல் அணுகுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஆய்வேட்டின் அமைப்பு
இவ்வாய்வேட்டின் அமைப்பு பின்வரும் முறையில் அமைந்துள்ளது. 1. கடித இலக்கியம் - அறிமுகம் 2. கடித இலக்கிய வரலாறு 3. கடித வகைகள் 4. கடித நடை
முடிவுரை
கடித இலக்கியம் பற்றிய சொல்லாடல்கள். அவை தமிழிலக்கியத்தில் வெவ்வேறு பெயர்களில், அதன் பயன்பாட்டுப் பொருளுடன், வழங்கிவந்தமை அறியப்பட்டன. இத்துடன் இலக்கியத்தில் அவற்றின் குறிப்புகளும் அறியப்பட்டன. கடித இலக்கியம் குறித்துப் பல்வேறு படைப்பாளியின் கருத்துக்கள் அறியப்பட்டன. கடித இலக்கியத்திற்கும், மற்ற துறைகளுக்கான நெருங்கிய உறவும் அறியப்பட்டது. கடித இலக்கியங்கள் அதன் பொருள் அடக்கத்திலும், தொகுப்பவரின் எண்ணத்தின் அடிப்படையிலும் தொகுக்கப்படுவதைக் காணமுடிகிறது. தமிழில் கடித இலக்கியத்தின் வளர்ச்சி, சங்கம் மருவிய காலத்திலிருந்தே தோன்றியிருக்கிறது. சங்கம் மருவிய காலத்தில் கடிதம் என்பது உத்தியாகக் கையாளப்பட்டுள்ளதைச் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, பெருங்கதை ஆகியவற்றின் மூலம் அறியமுடிகிறது. இடைக்காலத்தில் கடித இலக்கியமானது சீட்டுக்கவிதை வடிவில் தோன்றி வளர்கிறது. உரைநடைக்காலத்தில் சீட்டுக்கவிதைகள் தொகுக்கப்பட்டு தனிப்பாடல் திரட்டில் இடம்பெறுகின்றன. உரைநடைக் காலத்தில், தமிழ் மொழியில், முதன் முதலில் கடித இலக்கியமானது புதின வடிவில் தோன்றுவதை மறைமலையடிகள் மற்றும் குங்குமம் - இவர்களின் புதினப் படைப்புகளின் வழி அறியப்படுகிறது. இவை மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் தாக்கத்தாலும், வாசிப்பாலும் உருவானதைச் சான்றுடன் அறிய முடிகிறது. தனிநிலைக் கடிதங்கள் என்ற வகையில், தனிப்பட்ட நபர்களின் கடிதங்கள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. கற்பனைக் கடிதங்கள் என்று இன்னொரு வகையும் அமைகிறது. கடிதம் என்ற வடிவில், ஏதாவதொரு பாடுபொருளைக் கொண்டு, இவை எழுதப்பட்டு வருகின்றன. தமிழ் மொழி மட்டுமல்லாது, இந்திய, உலக இலக்கியங்களில் உள்ள கடித இலக்கிய வரலாற்றைக் காண்பதின் வழியாக, உலக, இந்திய, தமிழ் கடித இலக்கியங்களுள்ளான பொருண்மை, வடிவம், உத்தி ஆகியவை அறியப்படுகின்றன. இவ்வரலாற்றின் ஊடே காணும்போது, இந்திய இலக்கியத்தில் தோன்றிய முதல் கடித புதினங்கள், ஒரே காலகட்டத்தில் தோன்றியமை அறியப்படுகிறது. தவிரவும், அவற்றின் பாடுபொருளும் ஒன்றாகவே அமைந்துள்ளமை அறியப்படுகிறது. மிகவும் குறிப்பிடத்தகுந்த கடிதங்கள் யாவும், ஏதோ ஒரு பயனைக் கருதி உலக, இந்திய, தமிழ் மொழிகளில் பெயர்க்கப்பட்டிருப்பதை, அதைப் போன்றே படைக்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. அவற்றின் மையப் பொருளாக அறவுரைகள், அறிவுரைகள் அமைகின்றதைக் காணமுடிகிறது. நீதி நூல்களின் பணியைக் கடித இலக்கியங்கள் மேற்கொண்டுள்ளதால், அவற்றை, செய்யுள் வடிவிலான நீதிநூல்களின் மறு வடிவம் என்று அழைக்கலாம்.
நன்செய் புன்செய் நிலங்களின் பெயராய்வு - நா.அய்யப்பன்
கல்லூரி விவரம்
கல்லூரி பெயர் தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி
பல்கலைக்கழக பெயர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
நகரம் நாகர்கோவில்
மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண்
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் நா.அய்யப்பன்
நகரம் நாகர்கோவில்
ஆய்வு விவரம்
தலைப்பு நன்செய் புன்செய் நிலங்களின் பெயராய்வு
வகைமை நாட்டுப்புறவியல்
துணை வகைமை
பதிவு நாள் 2000
நெறியாளர் சா. செல்லையாபிள்ளை
துணை நெறியாளர் சா. செல்லையாபிள்ளை
ஆய்வு விளக்கம்
முன்னுரை
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்மனாபபுரம் என்ற ஊர்கல்குளம் என்று வழங்கப்பட்டது. திருவிதாங்கூர் அரசர்கள்தலைநகராகப் பத்மனாபபுரத்தைக் கொண்டிருந்தனர். சேர நாட்டின் தலைநகர் என்ற காரணத்தால் படைகளை வைத்திருப்பதற்கும், உணவு உற்பத்தி செய்து சேகரிப்பதற்கும், உரிய வசதிகள் உள்ளன. மலையரண், காட்டரண், நீர்அரண், மதில் அரண் என்ற நான்கு வகை அரண்களையும் உடைய இடமாகவும் இந்நகர் அமைந்துள்ளது. மேலும் 1920ஆம் ஆண்டு முதல் பத்மனாபபுரம் நகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது.
ஆய்வுத்தலைப்பு
‘நன்செய் புன்செய் நிலங்களின் பெயராய்வு’ என்பது இவ்வாய்வின் தலைப்பு
முன்னோடிகள்
1.மேல்நாட்டறிஞர்களின் கருத்துக்கள் 2. தமிழ் நாட்டறிஞர்களின் கருத்துக்கள் 3. வயல் பெயராய்வின் முன்னோடிகள் போன்றவையே ஆய்வாளர் கையாண்ட முன்னோடிகளாகும்.
ஆய்வின் நோக்கம்
நன்செய், புன்செய் நிலங்களின் பெயர்கள் எவ்வாறு சூட்டப்பட்டுள்ளன, எக்காரணங்களால் அப்பெயர்கள் அமைந்துள்ளன என்பவையும், களத்தின் அமைப்பு, தொழில் உற்பத்தி நம்பிக்கைகள் முதலானவற்றை வெளிக் கொணர்வதே ஆய்வின் நோக்கமாகும்.
அணுகு முறைகள்
அமைப்பியல் அணுகுமுறை, இலக்கண, இலக்கிய அணுகுமுறைகள், களவாய்வியல் அணுகுமுறை, சமூகவியல் அணுகுமுறை, நிலவியல் அணுகுமுறை, பகுப்பாய்வியல் அணுகுமுறை, வரலாற்றியல் அணுகுமுறை முதலான அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.
ஆய்வுப் பகுப்பு
இவ்வாய்வேடு 1.ஆய்வு அறிமுகம். 2. நன்செய் புன்செய் நிலங்களின் பெயரமைப்பு 3. கள அமைப்பு 4. தொழில் உற்பத்தி 5. நம்பிக்கைகள் 6. மொழிமாற்றம் 7. நிறைவுரை என ஆய்வேடு ஏழு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.
இயல் ஒன்று
ஆய்வு அறிமுகம், முகவுரை, ஆய்வுத்தலைப்பு, முன்னோடிகள், ஆய்வு நோக்கம், அணுகுமுறைகள், தகவல் திரட்டியமுறை, கையாண்ட உத்திகள், ஆதாரங்கள், நடை, ஆய்வுப்பகுப்பும் விளக்கமும் என்ற தலைப்புகளில்அமைகிறது.
இயல் இரண்டு
நன்செய், புன்செய் நிலங்களின் பெயரமைப்பு, பொதுப்பெயர், சிறப்புப் பெயர், அடிப்படையில் ஆராயப்பட்டுள்ளது. மேற்படி நிலங்கள்பெயர்கள் அடிப்படையிலும், பிற செய்திகள் அடிப்படையிலும் ஆய்வுக்கள அமைப்பு விளக்கப்பட்டுள்ளது. நிலங்களின் பெயராய்வு அடிப்படையில் அறியப்படும் தொழில் உற்பத்தி ஆகியன இவ்வியலின் வழியாக விளக்கப்பட்டுள்ளன.
இயல் மூன்று
கள அமைப்பு என்றஇயலில்தெய்வங்கள், மக்கள், நீர்வளம், ஊர்கள், இடம் பெற்றுள்ளன. இவற்றின் கருப்பொருளை, இயற்கைப் பொருள், செயற்கைப் பொருள் என்று பாகுபாடு செய்து இயற்கையாகவே தோன்றுவதை இயற்கைப் பொருள் என்றும், செயற்கையாகத் தோன்றுவதை செயற்கைப் பொருள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இயல் நான்கு
களத்தில் நிலங்களின் பெயராய்வு அடிப்படையில் அறியப்படும் தொழில் உற்பத்தி ஆகியன இவ்வியலின் வாயிலாக அறியப்படுகின்றன.
இயல் ஐந்து
களத்தில நிலங்களின் பெயராய்வு வழி அறியப்படும் நம்பிக்கைகள் ஒரு இயலாகக் கொள்ளப்பட்டு விளக்கப்பட்டுள்ளன.
இயல் ஆறு
நிலங்களின் பெயர்கள் தற்பொழுதுள்ள வடிவங்களின் முந்தைய வடிவங்களிலிருந்து எவ்வாறு திரிந்துள்ளன என்பவற்றை மொழிமாற்றம் இயல் வழியாக கண்டறியப்பட்டுள்ளது.
இயல் ஏழு
ஆய்வு செய்து கண்ட முடிவுகள் நிறைவுரை இயலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன
முடிவுரை
நிலப்பெயர்களால் இப்பகுதியில் உள்ள மூலிகை வளத்தை அறிய முடிகிறது. குமரிமாவட்டம் சித்த மருத்துவத்துறையில் சிறந்து விளங்குகின்றமைக்கு இக்களப்பகுதியின் இயற்கைச் சூழல் காரணமாக அமைந்துள்ளது எனவும் ஆய்வு மூலம் அறியப்படுகிறது. களத்தில் நன்செய் பயிர் உற்பத்தி அதிகமாகக் காணப்படுகிறது. இதற்குக் குளத்துப்பாசனத்தை விட ஆற்றுப் பாசனத்தைத் தான் மிகவும் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக களத்தில் பல குளங்கள் புன்செய் பயிர் செய்யும் நிலமாக மாறியுள்ளது என்பதையும், பல புன்செய் நிலங்கள் வீடுகளாகவும், கடைகளாகவும் உருவாகியுள்ளது என்பதையும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக களத்தில் மக்கள் தங்களுக்குரிய நிலங்களில் தேவைக்கேற்ப நன்செய் பயிற்களை உற்பத்தி செய்கின்றனர். தேவைக்கதிகமான இடம் உள்ளவர்கள், பிற இடங்களைப் பணப்பயிர் செய்ய குத்தகைக்கு அல்லது பாட்டத்திற்கு விட்டுவிடுகின்றனர். இவ்வாறு நிலங்களைப் பிறருக்குப் பயிர் செய்ய கொடுத்தாலும் உரிமையாளரின் பெயரே நிலத்திற்குக் களத்தில் வழங்கப்படுகிறது. பொதுவாகக் களத்தில் நன்செய், புன்செய் நிலப்பெயர்கள் அமைந்த முறைப் பொதுப்பெயர், சிறப்புப்பெயர், களஅமைப்பு, தொழில் உற்பத்தி, நம்பிக்கைகள், பட்டப்பெயர்கள் இவற்றின் அடிப்படையில் எவ்வாறெல்லாம் நிலப்பெயர்கள் அமைந்துள்ளன என்பவற்றை ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.
இசைமேதை டாக்டர் எஸ். இராமநாதன் - என். பாரதி
நிறுவன விவரம்
நிறுவனத்தின் பெயர் ஸ்ரீ ஸத்குரு ஸங்கீத வித்யாலயம்
நகரம் மதுரை
மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண் 625 002
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் என். பாரதி
நகரம் மதுரை
ஆய்வு விவரம்
தலைப்பு இசைமேதை டாக்டர் எஸ். இராமநாதன்
பதிவு நாள் 2008
நெறியாளர் லதா வர்மா
துணை நெறியாளர் லதா வர்மா
ஆய்வு விளக்கம்
முன்னுரை:-
‘இசைமேதை டாக்டர் எஸ். இராமநாதன்’ என்பது ஆய்வுத் தலைப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
ஆய்வு அணுகுமுறை:-
இவ்வாய்வில் விளக்கமுறை ஆய்வு அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது
ஆய்வுப் பகுப்பு:-
இவ்வாய்வேடு முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஆறு இயல்களைக் கொண்டது.அவை 1. எஸ். ஆரின் வாழ்க்கை வரலாறு 2. ஆசிரியப் பெருமக்கள் 3. நல்லாசிரியர் 4. ஆழ்ந்த ஆராய்ச்சியாளர் 5. தேர்ந்த இசைக்கலைஞர் 6. சிறந்த வாக்கேயக்காரர். என்பனவாகும்
முடிவுரை:-
சிறந்த பண்பாளராக, மனிதநேயம் மிக்கவராக, அறிவாற்றல் மிக்கவராக, அன்புள்ளம் கொண்டவராக, நல்லாசிரியராக, தேர்ந்த இசைக்கலைஞராக, ஆழ்ந்த ஆராய்ச்சியாளராக வாக்கேயக்காரராகத் திகழ்ந்த எஸ். ஆரை ‘இசைமேதை’ என்று உலகம் போற்றுவது, இசையைப் போற்றுவது போல் ஆகும். இசைக்காக இசையென்றே வாழ்ந்து காட்டிய சிறந்த மனிதரின் நினைவுகள், அவருடன் பழகியவர்களுக்கும் அவரை அறிந்தவர்களுக்கும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து என்றும் நீங்காதவை. ஆலமரம் போல் அவருடைய புகழ் எங்கும் பரந்து உறுதியுடன் நிலைத்து நிற்கும்.
1