ஆய்வு விவரம் தேடல்
ஊடகங்களில் மொழிப்பயன்பாடும் சமுதாயத் தாக்கமும். - து. ஜானகி
பல்கலைக்கழக விவரம்
பல்கலைக்கழக பெயர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
நகரம் மதுரை
மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண்
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் து. ஜானகி
நகரம் மதுரை
ஆய்வு விவரம்
தலைப்பு ஊடகங்களில் மொழிப்பயன்பாடும் சமுதாயத் தாக்கமும்.
வகைமை மக்கள்தகவல் தொடர்பியல்
துணை வகைமை தகவல் தொடர்பியல்
பதிவு நாள் 2005
நெறியாளர் வீ. ரேணுகாதேவி
துணை நெறியாளர் வீ. ரேணுகாதேவி
ஆய்வு விளக்கம்
முன்னுரை:-
ஊடகங்களில் மொழிப்பயன்பாடும் சமுதாயத் தாக்கமும்’ என்னும் தலைப்பை ஆய்வுப் பொருளாகக் கொண்டுஇவ்வாய்வுஅமைகின்றது.
ஆய்வுக் கருதுகோள்
ஊடகங்களில் பயன்படுத்தப்படும் தமிழ் மொழியின் மையக் கூறுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அம்மாற்றங்கள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தடையாக அமையுமா? என ஆராய்வது கருதுகோளாக அமைகின்றது. ஒவ்வொரு மொழிக்கும் என்று தனியான பண்பாட்டுக் கூறுகளும், கட்டமைப்பும் உண்டு. அவ்வாறு இருந்தால்தான் அது தனிப்பட்ட மொழி என நிலைநாட்டிக்கொள்ள முடியும். ஆனால் தமிழ்மொழியின் தனித்தன்மையைச் சிதைக்கும் மொழியினை த்தொலைக்காட்சி பயன்படுத்தினால் சமுதாயத்தில் கேடுகளை உண்டாக்குமா,என்பது அடுத்த கருதுகோளாக அமைகின்றது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்படும் மொழி வேறுபட்டுக் காணப்படுவதால் செய்யுள்மொழி, கவிதைமொழி, பத்திரிகை மொழி என இருப்பது போன்று தொலைக்காட்சிக்கெனத் தனிமொழி ஒன்று உருவாகுமா, என்பதை ஆராய்வது பிறிதொரு கருதுகோளாக அமைகின்றது.
ஆய்வு அணுகுமுறைகள்:-
இவ்வாய்வில் விளக்கமுறை ஆய்வு, ஒப்பீட்டுமுறை ஆய்வு, மதிப்பீட்டு முறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆய்வுப் பகுப்பு:-
இவ்வாய்வு முன்னுரை, முடிவுரை உள்ளடக்கி ஆறு இயல்களைக் கொண்டுள்ளது.அவை 1. முன்னுரை 2. நிகழ்ச்சிகளின் வகைப்பாடு 3. மொழிப்பயன்பாடு 3.1 நிகழ்ச்சிகளில் மொழிப்பயன்பாடு 3.2 விளம்பரங்களில் மொழிப்பயன்பாடு 4. பிற மொழிப் பயன்பாடு 4.1 நிகழ்ச்சிகளில் பிறமொழிப் பயன்பாடு 4.2 விளம்பரங்களில் பிறமொழிப் பயன்பாடு 5. சமுதாயத் தாக்கம் 5.நிகழ்ச்சிகளில் ஏற்படும் சமுதாயத் தாக்கம் 5.2 விளம்பரங்களில் ஏற்படும் சமுதாயத் தாக்கம் 6. முடிவுரை என்பனவாகும்
முடிவுரை:-
ஊடகங்களில் மொழிப்பயன்பாடு என்னும் ஆய்வு மிகப் பரந்துபட்ட ஒன்றாகும். இன்றைய சூழலில் மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வீட்டுத் தேவைகளில் ஒன்றாக ஊடகங்கள் அமைந்துள்ளன. இவ்ஊடகங்கள் மக்களிடையே பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன என்பது பெரும்பான்மையினரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. இன்று தொலைக்காட்சி வீட்டிலுள்ளவர்களைத் தனித்தனித் தீவுகளாக்கி வருகின்றன. மக்களிடையே பண்பாட்டுத் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாது அவர்கள் பயன்படுத்தும் மொழியமைப்பிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஊடகமொழியின் ஒரு பிரிவாக விளம்பர மொழியும் வளர்ந்து வருகின்றது. உரைநடைத் தமிழ், நாடகத்தமிழ் போன்று ஊடகத்தமிழ் என்ற ஒரு வகை நடை உருவாகிக் கொண்டிருக்கின்றது. இது பற்றிய ஆராய்ச்சி இனிவரும் ஆய்வாளர்களுக்கு நல்ல ஒரு ஆய்வுக்களமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
ஜெயமோகன் சிறுகதைகளில் மரபும் மனிதர்களும் - ஜா. புனிதா
கல்லூரி விவரம்
கல்லூரி பெயர் தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி
பல்கலைக்கழக பெயர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
நகரம் நாகர்கோவில்
மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண்
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் ஜா. புனிதா
நகரம் நாகர்கோவில்
ஆய்வு விவரம்
தலைப்பு ஜெயமோகன் சிறுகதைகளில் மரபும் மனிதர்களும்
வகைமை இக்காலஇலக்கியங்கள்
துணை வகைமை சிறுகதைகள்
பதிவு நாள் 2008
நெறியாளர் எஸ். ஸ்ரீகுமார்
துணை நெறியாளர் எஸ். ஸ்ரீகுமார்
ஆய்வு விளக்கம்
முன்னுரை:-
‘ஜெயமோகன் சிறுகதைகளில் மரபும் மனிதர்களும்’ என்பது ஆய்வுத் தலைப்பாக அமைகிறது. ஜெயமோகனின் சிறுகதைகளில் இனங்காணமுடிகிற – சிறுகதை வடிவ வளர்ச்சிக்குக் காரணமாக அமைகின்ற புதுமைக் கூறுகளை இந்த ஆய்வு, ஆய்வுக்கு உள்ளாக்குகிறது.
கருதுகோள்:-
1. வடிவ மாறுதல்களே இலக்கிய மரபின் வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன. வடிவ மாறுதல்கள் நிகழாத போது மரபு தேக்கநிலையை அடைகின்றது. 2. வாய்மொழி வழக்காறுகளுடனான தொடர்பின்மை செவ்வியல் இலக்கியங்கள் மீதான புறக்கணிப்பு வரலாற்று உணர்வின்மை ஆகியன தமிழ் நவீனத்துவ மரபின் தேக்கநிலைக்குக் காரணங்களாகின்றன. 3. தன் படைப்புகளின் மூலம் வடிவ மாறுதலை நடப்பிலாக்கும் படைப்பாளியே மரபின் போக்கைத் தீர்மானிக்கும் கலைஞனாகிறான். 4. குறிப்பிட்ட இலக்கியப் போக்கின் எதிர் காலத்தைத் தீர்மானிப்பதில் கலைஞன் முக்கியப் பங்கு பெறுகிறான்.
ஆய்வு அணுகுமுறை:-
இவ்வாய்வில் பகுப்பாய்வு அணுகுமுறையும், விளக்கவியல் அணுகுமுறையும், வரலாற்று அணுகுமுறையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆய்வுப் பகுப்பு:-
இவ்வாய்வேடு 1. ஆய்வு அறிமுகம் 2. தமிழ் இலக்கியச் சூழலில் நவீனத்துவமும் நவீனத்துவத்திற்குப் பின்னும் 3. ஜெயமோகனின் சிறுகதைகளில் வாய்மொழி வழக்காறுகளின் தாக்கம் 4. ஜெயமோகனின் யட்சி கதைகள் 5. ஜெயமோகன் சிறுகதைகளில் புதுச் செவ்வியல் கூறுகள் 6. ஜெயமோகனின் அறிவியல் வரலாற்றுப் புனைகதைகள் 7. முடிவுரை
முடிவுரை:-
ஜெயமோகனின் வரலாற்று மிகுபுனைவுகள் தமிழ்ப் புனைகதை மரபில் புதுத்தடம் அமைந்து இயங்குவனவாக அமைகின்றன. பொழுதுபோக்கு எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்ட அறிவியல் மிகுபுனைவுகள் இயல்பிற்கு மாறான களவுலகை எழுப்புவதில் நிறைவு கொள்கின்றன. ஜெயமோகனின் அறிவியல் மிகுபுனைவுகள் வாழ்வின் எதார்த்தத்தை உணர்த்துவதைக் குறியாகக் கொள்கின்றன. ஜெயமோகனின் அறிவியல் புனைவுகள் அறிவியல் புனைவுகளுக்கே உரிய அதிசய உணர்வை எழுப்புகின்றன. அதே சமயம் வாழ்வின் எதார்த்தத்தையும் துல்லியமாக உணர்த்திவிடுகின்றன. நாட்டார் கதைகளின் இயல்பான மிகுபுனைவை ஜெயமோகன் சிறுகதையில் கையாண்டு வெற்றியும் பெற்றுள்ளார். ஜெயமோகன் சிறுகதைகளின் புதுமைக்கூறுகள் சிறுகதைகளின் கலைவெற்றிக்குக் காரணங்களாக அமைகின்றன. இப்புதுமைக்கூறுகளுக்குக் காரணமாக அவர் அனுபவ வாழ்வின் தனிப்பண்புகள் அமைகின்றன. சிறுகதைகளில் ஜெயமோகன் அடைந்துள்ள கலைவெற்றி தமிழ்ச் சிறுகதையின் வடிவ வளர்ச்சிக்கு காரணமாக அமைகிறது.
இசைமேதை டாக்டர் எஸ். இராமநாதன் - என். பாரதி
நிறுவன விவரம்
நிறுவனத்தின் பெயர் ஸ்ரீ ஸத்குரு ஸங்கீத வித்யாலயம்
நகரம் மதுரை
மாவட்டம்
அஞ்சல் குறியீட்டு எண் 625 002
ஆய்வாளர் விவரம்
ஆய்வாளர் பெயர் என். பாரதி
நகரம் மதுரை
ஆய்வு விவரம்
தலைப்பு இசைமேதை டாக்டர் எஸ். இராமநாதன்
பதிவு நாள் 2008
நெறியாளர் லதா வர்மா
துணை நெறியாளர் லதா வர்மா
ஆய்வு விளக்கம்
முன்னுரை:-
‘இசைமேதை டாக்டர் எஸ். இராமநாதன்’ என்பது ஆய்வுத் தலைப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
ஆய்வு அணுகுமுறை:-
இவ்வாய்வில் விளக்கமுறை ஆய்வு அணுகுமுறை பின்பற்றப்பட்டுள்ளது
ஆய்வுப் பகுப்பு:-
இவ்வாய்வேடு முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஆறு இயல்களைக் கொண்டது.அவை 1. எஸ். ஆரின் வாழ்க்கை வரலாறு 2. ஆசிரியப் பெருமக்கள் 3. நல்லாசிரியர் 4. ஆழ்ந்த ஆராய்ச்சியாளர் 5. தேர்ந்த இசைக்கலைஞர் 6. சிறந்த வாக்கேயக்காரர். என்பனவாகும்
முடிவுரை:-
சிறந்த பண்பாளராக, மனிதநேயம் மிக்கவராக, அறிவாற்றல் மிக்கவராக, அன்புள்ளம் கொண்டவராக, நல்லாசிரியராக, தேர்ந்த இசைக்கலைஞராக, ஆழ்ந்த ஆராய்ச்சியாளராக வாக்கேயக்காரராகத் திகழ்ந்த எஸ். ஆரை ‘இசைமேதை’ என்று உலகம் போற்றுவது, இசையைப் போற்றுவது போல் ஆகும். இசைக்காக இசையென்றே வாழ்ந்து காட்டிய சிறந்த மனிதரின் நினைவுகள், அவருடன் பழகியவர்களுக்கும் அவரை அறிந்தவர்களுக்கும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து என்றும் நீங்காதவை. ஆலமரம் போல் அவருடைய புகழ் எங்கும் பரந்து உறுதியுடன் நிலைத்து நிற்கும்.
1